1.

What is பகுபதம் and பகாபதம்

Answer»

✴️விடை

➡️ பகுப்பை அடிப்படையாகக் கொண்டு சொற்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை

1) பகுபதம்
2) பகாப்பதம்

என்பவை ஆகும். பதம் என்னும் சொல்லும் சொல்லைக் குறிக்கும் வேறு ஒரு சொல் என்பதை முன்னுரையில் ஏற்கெனவே பார்த்தோம்.

➡️ பகுபதம்

ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பகுக்க (பிரிக்க) முடிந்தால் அது பகுபதம் எனப்படும்.

(எ.கா) அறிஞன், செய்தாள்

➡️ பகாப்பதம்

ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பகுக்க முடியவில்லை என்றால் அது பகாப்பதம் எனப்படும்.

(எ.கா) மரம், தேன், தலை, போல, சால



Discussion

No Comment Found