| 1. |
வன்மையுள் எல்லாந் தலையாயது எது?குறுவினாக்கள் திருக்குறள் |
|
Answer» விடை: தம்மை விட அறிவில் மேம்பட்ட பெரியோருடன் நட்பு கொண்டு, அவர் வழி நடத்தல் என்பது வலிமைகள் எல்லாவற்றிலும் தலையாயது. விளக்கம்: மேலே கூறப்பட்ட தொடர் கீழ்க்கண்ட குறளில் கையாளப்பட்டுள்ளது: அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். - குறள் 443 பெரியாரைப் போற்றித் தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல் பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும். பெரியாரைப் பேணித் தமராக் கொளர் - அப்பெரியவர்களை அவர் உவர்ப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல்; அறியவற்றுள் எல்லாம் அரிது - அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் பெரிது. (உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்கு உரிய அரசர்க்கு இப்பேறு சிறந்தது என்கிறது உரையாசிரியர்களின் கருத்து. |
|