| 1. |
வாக்கியத்தை அமைத்து எழுத்துதொடக்கப்பள்ளி |
|
Answer» Answer: 1. கரைத்துக் குடித்தாள் : வரலாற்று ஆய்வாளராக விரும்பிய ராதா வரலாறு தொடர்பான செய்திகளைக் கரைத்துக் குடித்தாள். 2. வாகை சூடினான் : சிங்கப்பூர் அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முத்து வெற்றி வாகை சூடினான். 3. முனைப்புடன் : சாதாரணநிலைத் தேர்வில் சிங்கப்பூரிலேயே முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டான் மாறன். 4. தணியவேயில்லை : ராமநாதனுக்கு வயது 80 ஆகிய பிறகும் தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆர்வம் தணியவேயில்லை. 5. கைநழுவிப்போனது :எல்லா தகுதிகளும் முத்துவுக்கு இருந்தாலும் நேர்முகத் தேர்வுக்குக் காலதாமதமாகச் சென்றதால் அந்தப் பதவி கைநழுவிப்போனது. 6. சாதனையாளர் : நிலவில் கால்பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் ஒரு சாதனையார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. 7. ஆயத்தமாகிவிட்டார் : போட்டியைப்பற்றி அறிவித்தவுடன் அதில் கலந்துகொள்ள ராமு ஆயத்தமாகிவிட்டார். 8. தடங்கலுமின்றி : எந்தத் தடங்கலுமின்றி ஒரு காரியத்தைச் செய்ய நினைப்பது சாத்தியம் மில்லை 9. அகால மறைவுக்கு : ஆந்திர முதல்வரின் அகால மறைவுக்குக் காரணம் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதே காரணமாகும். 10. அஞ்சலி : கல்பனா சாவ்லாவின் அகால மறைவுக்கு உலக மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். 11. இலட்சியப்பாதை : நமது இலட்சியப்பாதையை நோக்கி நடைபோடும் போது தடைகள் வந்தால் அவற்றை எதிர்கொள்ள வேண்டும். 12. தலைமுறையினர்: இன்றைய தலைமுறையினர் பல வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி தங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். 13. இலக்கை : நம் இலக்கை அடைய எத்தகைய பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டும். 14. மேகக்கூட்டம் : வானில் கருமேகக்கூட்டம் கான மயில்களை ஆடவைப்பதில் வியப்பில்லை. 15. எள்ளி நகையாடி : பிறரை எள்ளி நகையாடி அதில் இன்பம் காணும் சிலரை எனக்குப் பிடிப்பதில்லை. 16. நாடுவார்கள் : தங்களுக்கு மக்களின் உதவி தேவைப்படும்போதே சிலர் அவர்களை நாடுவார்கள். 17. நெறியோடு : நேர்மை தவறாது, பொய்யுரைக்காது நெறியோடு வாழ்ந்த மன்னர்கள் பலரின் வாழ்கை வரலாறுகளை நாம் படிக்கின்றோம். 18. கடிந்துரைப்பது : நண்பர்கள் தவறிழைக்கும்போது அவர்களைக் கடிந்துரைப்பது தவறில்லை. 19. நயம்பயக்கும் : மற்றவர்களுக்கு நயம்பயக்கும் செயலைச் செய்யாவிட்டாலும் தீங்கு விளைவிக்கும் செயலைச் செய்யாமலிருப்பதே நன்று. 20. உய்த்துணர: இலக்கிய இன்பத்தை உய்த்துணர அவ்விலக்கியங்களில் அதிக ஈடுபாடு காட்டவேண்டும். 21. ஒப்பானவை: திருக்குறளின் கருத்துகளுக்கு ஒப்பானவை வேறு எவையும் இல்லையென்பதால் திருக்குறள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 22. துன்புறுத்துவது : மற்றவர்களைக் கடுஞ்சொற்களால் துன்புறுத்துவது கொடுமையான செயலாகும். 23. பற்றுதலையும்: இன்றைய இளையர்களுக்கு மொழியின் மீது உள்ள பற்றுதலையும் நாட்டின் மீது உள்ள பற்றுதலையும் கண்டு வியந்துபோனார் அதிபர். |
|