1.

தென்னாப்பிரிக்காஅ) தெ ன ்னா ப் பி ரி க ்கா வி ல்ஆங்கிலேயருக்குச் சொந்தமானநாடுகள் எவை?ஆ) டச்சுக்காரர் கைவசமிருந்த பகுதிகள்எவை?இ) கேப்காலனியின் பிரதம அமைச்சர்யார்?ஈ) போயர் போர்கள் எத்தனை ஆண்டுகள்நடைபெற்றன?

Answer»

தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில்  ஆங்கிலேயருக்குச் சொந்தமான  நாடுகள்:

  • தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் நேட்டால்,கேப் காலனி ஆகிய பகுதிகளைப் பெற்றிருந்தனர்.

டச்சுக்காரர் கைவசமிருந்த பகுதிகள்:

  • உள்நாட்டில்  டச்சுக்காரர்கள் போயர் (BOER) என அழைக்கப்பட்டனர்.
  • டிரான்ஸ்வாலைச் சேர்ந்த  நாடுகளையும் சுதந்திர ஆரஞ்சு நாட்டையும்  பெற்றிருந்தனர்.
  • 1886 இல் டிரான்ஸ்வாலில்  தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன்  இங்கிலாந்தைச் சேர்ந்த சுரங்கத்தொழில்  வல்லுநர்கள் ஜோகன்னஸ்பர்க்கில் வந்து குடியேறினர்.

கேப்காலனியின் பிரதம அமைச்சர்:

  • 1890 இல் கேப் காலனியின் பிரதம மந்திரியான  சிசில் ரோட்ஸ் டிரான்ஸ்வாலுக்கு வடக்கே  ஆங்கிலேயரின் விரிவாக்கத்தை ஊக்குவித்தார்.

போயர் போர்கள்:

  • இதன் விளைவாக ஏற்பட்ட போயர் போர்கள்  மூன்று ஆண்டுகள் (1899–1902) நடைபெற்றன.


Discussion

No Comment Found