1.

பகைமை இருளைப் போக்குவது எதுவென வள்ளுவர் கூறுகிறார்?குறுவினாக்கள் திருக்குறள்

Answer»

விடை:



பொருள் என்று எல்லாராலும் சிறப்பித்துப் பேசப்படும் அணையா விளக்கு, அதனை உடையவர் நினைத்த இடங்களுக்கு எல்லாம் சென்று பகை என்னும் இருளை அழிக்கும்.



விளக்கம்:



மேற்கூறிய விளக்கம் கீழ்க்கண்ட குறளில் பின் வருமாறு காணப்படுகிறது:



பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று - குறள் 753



பொருள் என்னும் பொய்யா விளக்கம்- பொருள் எனப்படும் அணையா விளக்கு எண்ணிய தேசங்களுக்கெல்லாம் சென்று பகையாகிய இருளைப் போக்கும். தன்னை செய்தவர்க்கு அவர் நினைத்த தேயத்து சென்று பகை என்னும் இருளைக் கெடுக்கும். அதாவது, பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள்ளும் சென்று பகையாகிய இருளைப் போக்கும்.




Discussion

No Comment Found