1.

பெரியாரைத் துணையாகக்கொல்லாமையால் வருங்குற்றம் யாது?சிறுவினாக்கள்திருக்குறள்

Answer»

விடை:


பெரியாரைத் துணையாகக் கொள்ளாமையால் வரும் குற்றம் :


பெரியாரைத் துணையாய்க் கொள்ளாதவன், பகைவராய் இருந்து கேடு செய்வார் எவரும் இலர் எனினும், தானே தீய வழிகளில் சென்று அழிவான். முதலீடு இல்லாத வணிகருக்கு இலாபம் இல்லை. அதுபோல, தம்மைத் தாங்கும் பெரியார் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை. தக்க சமயத்தில் உறுதி கூறும் பெரியார் தொடர்பு இல்லாதவன் பலரை பகைத்துக் கொள்வதைவிட பன்மடங்கு பெருந்தீங்கு அடைவான்.



விளக்கம்:



கேள்வியில் "கொல்லாமையால்" என்ற வார்த்தையை "கொள்ளாமையால்" என்று படிக்கவும்.



பெரியாரை துணைக் கொள்ளாததனால் வரும் தீங்கை குறள்கள் 448,449 மற்றும் 450 விளக்குகின்றன. குற்றம் கண்ட இடத்து இடித்துத் திருத்தும் பெரியாரின் பாதுகாப்பையும், அவர்களோடு தொடர்பையும் ஏற்படுத்தி கொள்ளாதவன் தன்னை கெடுக்கும் பகைவர்கள் இல்லை எனினும், தானே கெட்டழிவான் என்று பொருள் கூறும் வகையில் அமைந்துள்ளன.




Discussion

No Comment Found