Saved Bookmarks
| 1. |
கனிமவியல் அறிவு பற்றி எழுதுக.சிறுவினாக்கள்தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் |
|
Answer» விடை: கனிமவியல் அறிவு : சிலப்பதிகாரத்தில் ‘ஐவகை மணிகள் ஒளிவிடும் திறத்தினால் வெவ்வேறு பெயர்கள் கொண்டுள்ளன. ஆனால், அவற்றின் மூலப்பொருள் ஒன்றே.’ எனக் கூறப்பட்டுள்ளது. இஃது இன்றைய வேதியியல் கூறுகளுடன் ஒப்பு நோக்கத் தக்கது. விளக்கம்: பழந்தமிழர் காதலையும், வீரத்தையும் அன்றி அறிவியலையும் சிந்தித்தனர் என்பதை இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது. அறிவின் நுண்மையே அறிவியலாகும். இது காப்பியங்களிலும் ஆளுமை பெற்றுத் திகழ்கின்றது. சிலப்பதிகாரத்தில், ஊர்காண் காதையில் ஒருமை தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும் என்னும் இவ்வரிகள் பல்வகை மணிகளையும், அதன் தன்மைகளையும் விளக்குவதன் மூலம் இது தெளிவாகுகிறது. |
|