1.

கீழ்க் காண்பனவற்றில் எது ஹேமார்க்கெட் நிகழ்ச்சியின் நினைவுநாளாகக்கடைபிடிக்கப்படுகிறது?அ) சுதந்திர தினம்ஆ) உழவர் தினம்இ) உழைப்பாளர் தினம்ஈ) தியாகிகள் தினம்

Answer»

ஹே  மார்க்கெட் நிகழ்ச்சியின் நினைவு நாளாகக் உழைப்பாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

  • 1886 ஆம் ஆண்டு  மே மாதம் 4 ஆம் தேதி                சிகாகோவின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு தொழிலாளர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • இந்த ஆர்பாட்டத்தின் முக்கிய கோரிக்கையாக நாள் ஒன்றுக்கு எட்டு மணிநேர வேலையை முன்வைத்தது.
  • அமைதியாக நடந்து கொண்டிருந்த இக்கூட்டம்  காவல்துறையால் பல சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பல பேரை சுட்டுக் கொன்றது.
  • ஹே மார்க்கெட் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 1 ஆம் நாள் இன்றளவும் சர்வதேச தொழிலாளர் நாளாகக் (மே தினம்) கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்தியாவில் முதன்முதலாக  1923 ஆம் ஆண்டு  மே மாதம்  1 ஆம் நாள் தொழிலாளர் தினம் சென்னையில் திருவல்லிக்கேணிக் கடற்கரையில்  கொண்டாடப்பட்டது.
  • இந்திய விவசாயத் தொழிலாளர் கட்சியைத்  தொடங்கி வைத்தவர் சிங்காரவேலர் ஆவார்.  
  • இவர்  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க காலத் தலைவர்களில் ஒருவருமாக திகழ்ந்தார்.
  • இந்த தொழிலாளர்கள் தினக்  கொண்டாட்டமானது சிங்காரவேலரால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.


Discussion

No Comment Found